செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

ரமலான் சிறப்பு தொழுகை


காயல்பட்டினம், ஏர்வாடியில் இன்று
ரமலான் சிறப்பு தொழுகை
ஆறுமுகநேரி, ஆக. 30&
காயல்பட்டினம் கடற் கரையில் இன்று ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
ரமலான் பண்டிகையொட்டி காயல்பட்டினம் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் சார்பில் சிறப்பு தொழுகை கடற்கரையில் நடந்தது. அல் ஜாமி வுல் அஷ்ஹர் ஜிம் ஆ பள்ளி இமாம் நெய்னா முகம்மது சிறப்பு தொழுகையை நடத்தினார். அல் ஜாமி வுல் அஷ்ஹர் ஜிம் ஆ பள்ளி கத்தீபு அப்துல் மஜித் மஹ்ழரி குத்பா பேரூரை நிகழ்த்தினார்.
சிறப்பு தொழுகையில் இஸ்லாமிய சகோதரத்துவ இணைய தலைவர் தஸ்தஹீர், செயலாளர் வக்கீல் மீராசாகிப், பொருளாளர் மக்கி ஹாஜி, துணைத்தலைவர்கள் அபுல் ஹஸன் கலாமி, அபூபக்கர், இப்னு சவூது, துணை செயலாளர் நவாஸ், துணை பொருளார் கியாது சேட், அன்னை கதீஜா மதர்ஷா நிர்வாகி மாஷா அல்லா செய்யது முகம்மது, கரூர் அசேன், இந்திய யூனியன் முஸ்லீம் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அப்துல் வாஹித், தேமுதிக மாவட்ட செயலார் அகமது உசேன், தமுமுக நகர தலைவர் ஜாஹீர் உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏர்வாடியில் இன்று ரமலான் பண்டிகை ஜாக் அமைப்பினர் கொண்டாடினார்கள். பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். காலை 7 மணிக்கு அல்ஹூதா மெட்ரிக்ப்பள்ளி வளாகத்தில் சிறப்பு தொழுகை நடத்தி ரமலான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். சிறப்பு தொழுகையில் பள்ளியின் இமாம் அப்துல் ரஷூத் மார்க்க சொற்பொழிவு ஆற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக