நெல்லை மாவட்டத்தில் இன்று ரமலான் சிறப்பு தொழுகை
தென்காசி, ஆக. 31&
தென்காசி, கடையநல்லூர், பொட்டல்புதூர், புளியங்குடி, பத்தமடையில் ரம்ஜான் நோன்பு பெரு நாளை முன்னிட்டு பள்ளிவாசல்களில்சிறப்புதொழுகை நடந்தது.
தென்காசியில் இன்று காலை 7.30 மணிக்கு ரம்ஜான் பெரு நாளை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் காட்டு பாவா பள்ளிக்கூடத்திடலில் மாநில மேலாண்மைகுழு உறுப்பினர் சுலைமான் தலைமை யில் சிறப்பு தொழுகை நடந்தது.
தென்காசி முஸ்லிம் ஜமாத் சார்பில் வி.டி.எஸ்.ஆர்.மஹாலில் அப்துல்ரகுமான் ஷிப்லி தலைமை யில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் முகம்மது அலி, ரபிக்பின்உசேன்,ஹாஜா உட்படஏராளமான பெண்கள்கலந்து கொண்டனர்.
தென்காசி நடுப்பேட்டை முகைதீன் ஜூம் ஆ பள்ளிவாசல், ஐந்துவர்ணம் பெரியபள்ளிவாசல், கடையத்தெரு இஸ்மாயில் மீயான் ஜூம்மா பள்ளிவாசல், மரைக்காயர் பள்ளிவாசல், அரிப்புகாரத் தெரு ராஜ்மீயான் பள்ளிவாசல், வேம்படி பள்ளிவாசல், சொர்ணபுரம் தெரு பள்ளிவாசல், மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் ஆகியவற்றிலும் சிறப்பு தொழுகை நடந்தது. ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
கடையநல்லு£ரில் ரம்ஜான் நோன்பு பெருநாளை முன்னிட்டு காயிதே மில்லத் திடலில் இன்று காலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தின் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கடையநல்லு£ர் காயிதே மில்லத் திடலில் காலை 6.45 மணிக்கு மாநில மேலாண்மை குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடத்தினார். ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் டவுண் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கடையநல்லு£ர் ரகுமானியபுரம் 3வது தெரு மர்யம் பள்ளிவாசல் வளாகத்தில் இஸ்லாமிய கல்லு£ரி பேராசிரியர் அப்துந் நாஸிர், மக்காநகர் பள்ளிவாசல் சார்பில் பஷீர் அகமது ஆகியோர் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது.
பொட்டல்புதூர், பத்தமடை, புளியங்குடி பகுதியில் உள்ள பள்ளிவாசல்களிலும் தொழுகை நடந்தது.
புளியங்குடி மேலப்பள்ளிவாசலில் கலீல்ரகுமான் ஆலிம் தலைமையில் சிறப்புத் தொழுகை நடந்தது. இதில் ஜமாத் கமிட்டி தலைவரும், நகராட்சி சேர்மனுமான முகமது இஸ்மாயில், முஸ்லிம் லீக் நகர செயலாளர் அப்துல்வகாப், மாவட்ட பொருளாளர் காதர்மைதீன், இளைஞரணி தலைவர் லியாகத்அலி, கவுன்சிலர்கள் மைதீன்பிச்சை, சாகுல்ஹமீது, அப்துல்ரகுமான், மதிமுக நகர செயலாளர் சாகுல்ஹமீது, அதிமுக நகர அவைத்தலைவர் முகமது உசேன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் சாகுல்ஹமீது, ஆடிட்டர் பீர்முகமது, முஸ்லிம் நல அறக்கட்டளை பொதுத்தலைவர் செய்யதுசுலைமான், லயன்ஸ் கிளப் பொருளாளர் பீர்முகமது உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
புளியங்குடி கீழப்பள்ளிவாசலில் மீராஷாஆலிம் தலைமையில் நடந்த சிறப்புத் தொழுகையில் ஜமாத் தலைவர் அலாவுதீன், டாக்டர் அசன் இப்ரா ஹிம், கவுன்சிலர் ஜாகீர்உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புளியங்குடி மஜூத்தூர் ஆலம் பள்ளிவாசலில் நடந்த தொழுகையில் ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் காஜாமைதீன், மேற்கு பகுதி விவசாய சங்கத் தலைவர் யுனூஸ் உட்பட கலந்து கொண்டனர்.
புளியங்குடி தவ்ஹீத்ஜமாத் சார்பில் கிரசன்ட் ஆங்கிலப்பள்ளி வளாகத்தில் நடந்த சிறப்புத் தொழுகைக்கு அறக்கட்டளைத் தலைவர் முகமதுஅலி தலைமை வகித்தார். இதில் யாசீர் பிரதவுசி ஆலிம் பங்கேற்று சிறப்புத் தொழுகையை நடத்தினார்.
இந்த தொழுகையில் அறக்கட்டளை செயலாளர் அப்துல்ரகுமான், பொருளாளர் பஷீர்ஒளி, தமுமுக நகர தலைவர் முகைதீன், துணைத் தலைவர் ரஹ்மத்ஷாஜகான், பொருளாளர் மைதீன், மமக துணைச் செயலாளர் ரபீக் உட்பட ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் சார்பில் காயிதேமில்லத் பள்ளி அருகில் நடந்த சிறப்புத் தொழுகையில் செய்யதுஅலி, முகமதுஅலி பிலால், தாஜ் முகமது யூசுப் மற்றும் நிர்வாகிகள் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்
வாசுதேவநல்லூர்
வாசுதேவநல்லூர் ஜூம்மா பள்ளிவாசலில் நடந்த சிறப்புத் தொழுகையில் ஜமாத் தலைவர் வேதானூர் இஸ்மாயில், சிங்கப்பூர் ஆலிம்ஷா, முஸ்லிம் லீக் நகர செயலாளர் ஜின்னா, அண்ணா தொழிற்சங்க நிர்வாகி முகமது உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகிரி
சிவகிரி விஸ்வநாதப்பேரியிலுள்ள பள்ளி வாசல்களில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடந்தது. அருளாட்சி பள்ளிவாசலில் நடந்த சிறப்புத் தொழுகையில் முசிபுல்லாக் ஆலிம் தலைமை வகிததார். இதில் ஜமாத் தலைவர் ஷேக்தைமீன் மரைக்காயர், முஸ்லிம் லீக் தலைவர் மீரான் மரைக்காயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.பாம்புக்கோயில் ச ஜூம்மா மசூதியில் ராஜாமுகைதீன் ஆலிம் தலைமையில் நடந்த சிறப்புத் தொழுகையில் ஜமாத் தலைவர் த்ட்டாதி என்று முஸ்லிம் லீக் நகர தலைவர் செய்யது இப்ராஹிம் உட்பட பலர் கலந்து கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக